2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பொலிஸாரால் தேர்தல் சுவரொட்டிகள் அகற்றல்

Janu   / 2024 செப்டெம்பர் 18 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதி பிரச்சாரத்திற்கான நாள் புதன்கிழமை (18) ஆகும் .

இன்றிலிருந்து தேர்தல் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான பதாதைகள் சுவரொட்டிகளை காட்சிப்படுத்துவது தேர்தல் சட்ட விதிமுறை மீறல் என இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் வவுனியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பதாதைகள் மற்றும் சுவரொட்டிகள் நீக்கும் பணிகளை வவுனியா பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயக்கொடி தலைமையிலான 20க்கும் மேற்பட்ட பொலிஸார் குறித்த பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

க. ஆகரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .