2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

புதையல் தோண்ட முற்பட்ட 5 பேர் கைது

Mayu   / 2024 ஜூன் 09 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

யது பாஸ்கரன் 

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 5 பேர் விசேட அதிரடிப்படையினரால் சனிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி இராமநாதபுரம் அழகாபுரி பகுதியில் புதையல் தோண்ட உட்பட்ட முற்பட்டனர் என்ற  சந்தேகத்தில் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றும்  பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஐந்து பேர் விசேட அதிரடிப்படை யினரால்  கைது செய்யப்பட்டு இராமநாதபுரம்  பொலிஸ்நிலையத்தில்  ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

இவர்களிடமிருந்து புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்டபொருட்கள் கருவிகள் மற்றும் அவர்கள் பயணித்த வாகனமும்  மீட்கப்பட்டு இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கொழும்பு தலைமை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ்உத்தியோகத்தர் உட்பட  கந்தளாய் மற்றும் ஏறாவூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத்தெரியவந்துள்ளது 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .