2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

பதனழிந்த ஐஸ்கிறீம் விற்பனை

R.Tharaniya   / 2025 மார்ச் 17 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேற்பார்வையில் பொது சுகாதார பரிசோதகர் நிர்மலானந்தன் அவர்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டலிக்கும் அமைய, அங்கா​டி உணவகங்கள் மற்றும் தேநீர்சாலை என்பன தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நல்லூர் பொது சுகாதார பரிசோதகர் ம.அனுசூதனன் தலைமையிலான குழுவினரால் கடந்த (12) திகதி அங்கா​டி பரிசோதிக்கப்பட்டன. இதன்போது கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள அங்கா​டியில், பழுதடைந்த குளிர்சாதன பெட்டியில் உரிய வெப்பநிலை பேணப்படாமல், பதனழிந்த ஐஸ்கிறீம்களை விற்பனைக்கு வெளிக்காட்டி வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.

இதையடுத்து பழுதடைந்த குளிர்சாதன பெட்டியின் பதனழிந்த ஐஸ்கிறீம்களை பொது சுகாதார பரிசோதகர் ம.அனுசூதனன் அவர்கள் கைப்பற்றினார்.அங்கா​டி முகாமையாளருக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை திங்கட்கிழமை (17) திகதி விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான், அங்கா​டி முகாமையாளருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு 135,000/= தண்டம் விதித்து தீர்ப்பளித்தார்.

செந்தூரன் பிரதீபன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X