2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

டிப்பர் வாகனங்களுடன் ஐவர் கைது

Janu   / 2024 ஓகஸ்ட் 09 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐந்து டிப்பர் வாகனங்களுடன் ஐவர் கைது செய்யப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர் .

சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்னவின் தலைமையில் புதன்கிழமை (07) அன்று இரண்டு டிப்பர் வாகனங்களும் வியாழக்கிழமை (08) அன்று மூன்று டிப்பர் வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது .

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வியாழக்கிழமை (08) அன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .