Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Janu / 2024 மார்ச் 10 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் உள்ள காணியொன்றை மோசடியாக உரிமை மாற்றம் செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லூர் பகுதியில் மூவருக்கு சொந்தமான காணி ஒன்றினை , ஒருவர் காலமான நிலையிலும் , இன்னொருவர் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையிலும் , மற்றையவர் தனது பெயருக்கு காணியை உரிமை மாற்றம் செய்துக்கொண்டுள்ளார் .
இது தொடர்பில் அறிந்து கொண்ட வெளிநாட்டில் வசித்து வந்த நபர் , தனக்கு தெரியாமல் தனக்கு சொந்தமான காணியை உரிமை மாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார் என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மோசடியான முறையில் காணி உரிமை மாற்றம் செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.றொசாந்த்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago