2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய நபர்

Kogilavani   / 2012 ஜூலை 10 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேரடி தொலைக்காட்சி விவாதமொன்றில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது எதிர்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பாதணிகளை கழட்டி எறிந்ததுள்ளதுடன் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய சம்பவம் ஜோர்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதியமைச்சரான மன்சூர் செய்ப் அல் டின் மூர்ட் சிரிய உளவாளி என ஜோர்தான் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹம்மட் சோவாப்காவே  கூறியதையடுத்து இம்மோதல் ஏற்பட்டது.

அவதூறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் சோவ்பகா எழுந்து நின்று தனது பாதணிகளை கழற்றி முரட்மீது எறிந்துள்ளார்.

பின்பு தனது ஜாக்கெட்டிலிருந்து துப்பாக்கியை எடுத்து எதிர்தரப்பு உறுப்பினர் மீது காட்டி அச்சுறுத்தினார்.

எனினும் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மொஹம்மட் ஹஸ்பாஸ்னே, இருவருக்குமான பிணக்கை முடிவுக்கு கொண்டு வந்ததுடன் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியும் திடீரென நிறைவு செய்யப்பட்டது.

இவர்கள் சண்டையிட்ட காட்சியானது ஜோர்தானிய செய்மதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .