2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வீதிப் பாதுகாப்புக்காக நிர்வாண சைக்கிள் போராட்டம்

Kogilavani   / 2012 மார்ச் 13 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

பெரு நாட்டின் தலைநகர்  லிமாவில்  வீதி பாதுகாப்புகளை பலப்படுத்தக் கோரி நூற்றுக்கணக்கான சைக்கிளோட்டிகள் இணைந்து நிர்வாணக்கோலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

லிமாவில் உள்ள வீதிகளில் சாரதிகளின் கவனக்குறைவுக் காரணமாக ஆயிரக் கணக்கானோர்  விபத்துக்களினால் உயிரிழக்கின்றனரென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது உடலில் வாசகங்கள், கோஷங்களை எழுதிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இப்போராட்டத்தினால் லிமாவிலிருந்து சுமார் ஏழு மைல் தூரமான போக்குவரத்து பாதைகள் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'இது எங்களுடைய உடல், இந்த உடலுடன் நாங்கள் தெருவுக்கு செல்கின்றோம். எம்மை பாதுகாப்பதற்கு எம்மிடம்  கார் இல்லை' என இப்போராட்டத்தின் ஒழுங்கமைப்பாளர் ஒக்டாவியோ செகேரா தெரிவித்துள்ளார்.

இப்போராட்டத்தில் 300-500  ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்குப்பற்றியிருப்பரென மதிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • Jeewan Thursday, 15 March 2012 01:57 AM

    நிர்வாணமா வீதியில் போறதால விபத்து எப்படி குறையும்?

    Reply : 0       0

    haleemraja Saturday, 17 March 2012 12:33 AM

    கிறுக்குப் பயல்கள்

    Reply : 0       0

    haleem Saturday, 17 March 2012 03:24 AM

    சூப்பர் ரேசப்பா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .