2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

தலைமயிரினால் தயாரிக்கப்பட்ட நெக்லஸ்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 21 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரிட்டனைச் சேர்ந்த ஓவியர் ஒருவர் மனித தலைமயிரினால் நெக்லஸ் ஒன்றை தயாரித்துள்ளார்.

லண்டன் வடபகுதியில் உள்ள மிடில்செக்ஸ்  பல்கலைக்கழகத்தில் ஓவியத்துறை மாணவியான கெரி ஹாவ்லி (வயது 23) என்பவரே இவ்வாறு தலைமயிரிலான நெக்லஸை தயாரித்துள்ளார்.

இவர் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வகுப்பு மாணவியாக இருக்கும்போது ஐந்து நெக்லஸுக்களுக்கான தலைமயிர்களை சேகரிக்க ஆரம்பித்தாராம். மனிதர்களின் தலையிலிருந்து உதிரும் மயிர்கள் குறித்து கவனம் செலுத்தியபோது அவருக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
கெரியின் தாயினுடைய ஜப்பானிய நண்பியே கெரியின் நெக்லஸிற்கான மயிர்களை அதிகம் வழங்கியுள்ளார்.

'எனது தாயின் நண்பி தனது 30 சென்றிமீற்றர் நீளமான தலைமயிரை எனக்கு வழங்கினார். அது உண்மையில் மிகவும் தாராளனமானதாக காணப்பட்டது'  என அண்மையியில் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவரான  கெரி தெரிவித்துள்ளார்.
அவர் தான் தெரிவுசெய்த நகலைப்போன்று தலை மயிர்களையும் கத்தரித்து பசையினால் மிகவும் நுட்பமாக ஒட்டி நெக்லஸ்களை தயாரித்துள்ளார்.

ஒவ்வொரு நெக்லஸையும் செய்வதற்காக 60 மணித்தியாலங்களை அவர் செலவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • lihas Friday, 23 September 2011 09:37 PM

    அருமையான தயாரிப்பு .....பிரமாதம்

    Reply : 0       0

    hamaza Tuesday, 27 September 2011 05:24 PM

    நல்லா இருக்கு இந்த மயிரு நெக்லஸ் ........

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .