2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

நிர்வாண அழகிகளின் கண்காட்சியை காண்பதற்கு குவியும் 'கலை' ஆர்வலர்கள்

Kogilavani   / 2010 டிசெம்பர் 07 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜேர்மனியிலுள்ள கலைக்கூடமொன்று  ஆண் கலை ஆர்வலர்களால் நிரம்பி வழிகிறது.  குதி உயர்ந்த பாதணி மாத்திரம் அணிந்த டசன் கணக்கான மொடல் அழகிகள்  நிர்வாணகோலத்துடன் அங்கு காணப்படுவதே இதற்கான  காரணம்.

அக்கண்காட்சியில் இரண்டு பெண்கள் வந்து,  'எழுந்து நில்லுங்கள்,   நேராகவும் உறுதியாகவும் நடவுங்கள் மற்றும் பெருமையுடன் இருங்கள்' என்று கூறும் ஒலியைத் தவிர வேறு எவ்வித ஒலியும் எழவில்லை. இவ்வரங்கில் ரசிகர்கள் கண்களை அகலவிரித்து  மொடல்  அழகிகளை பார்த்துக் ரசிக்கின்றனர்.

கலைஞர் வனேசா  பீகுரொப்ட் இது தொடர்பாக கூறுகையில்,  நகரின் நவீன கலைகளுக்கான இந்நூதனசாலையில் நடத்தப்படும் இந்த கண்காட்சியானது  பெண்களை அவர்கள்  மீதான கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெறவும் வலிமைபெறவும் ஊக்குவிக்கிறது எனக் கூறியுள்ளார்.

ஆனால், பெண்ணுரிமையாளர்கள் இக் கண்காட்சியை கடுமையாக விமர்சித்துள்ளனர்.  பெண்களை வெறும் கவர்ச்சிப்பொருளாக இது அர்த்தப்படுத்துவதாக அவர்கள்  இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
 

 


  Comments - 0

  • xlntgson Wednesday, 08 December 2010 09:20 PM

    செக்ஸ் அல்லது நிர்வாணம் என்ற சொல்லை ஒரு பெண் காதில் விழ சொன்னால் போதும் இங்கே சிறைவாசம் அனுபவிக்க வேண்டும், சாட்சி இருந்தால்!
    ஒரு பெண் பொலீஸ்உத்தியோகஸ்தரை பார்த்துக்கொண்டு நாக்கை நீட்டி நீட்டிககாட்டியதற்காக ஓர் இளைஞன் நன்கு புடைக்கப்பட்டு அசோபன வழக்கில் தள்ளப்பட்டிருக்கின்றான்,
    பொது இடங்களில் அரை நிர்வாணமாக அல்லது நிர்வாணமாக திரிந்த குற்றச்சாட்டில்! குறைந்தது 6 மாதம் கம்பி எண்ணவேண்டும், குற்றத்தை ஒத்துக்கொண்டால் அபராதம் & ஒத்திவைக்கப்பட்ட சிறைதண்டனையோடு தப்புவான்.
    வழக்கு பேசி வெல்ல இயலும் பல வருடம் ஆகும்!

    Reply : 0       0

    A P M Monday, 13 December 2010 12:22 PM

    இதுதான் மேற்குலகின் பெண்ணுரிமை.

    Reply : 0       0

    tamilsalafi.edicypages.com Monday, 13 December 2010 04:46 PM

    இந்த மக்களின் ஊர்களில் சென்று வாழ மக்கள் துடியாய் துடித்து,
    உயிர் போனாலும் பரவாயில்லை, சிறை சென்றாலும் பரவாயில்லை , என்று துடிக்கும் ஒரு கூட்டம் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.

    Reply : 0       0

    xlntgson Monday, 13 December 2010 08:56 PM

    பார்த்துவிட்டு வாளாவிருக்க நம்மவர் பழக்கப்படவில்லை!
    அதையே பெரிய குற்றமாக ஆக்கி சிறையில் தள்ளப்பட்டு பழக்கப்பட்டவர்களுக்கு விருப்பக்காதலுக்கும் பலாத்காரத்துக்கும் வேறுபாடு பாடம் சொல்லிக்கொடுக்க எவரும் தயாரில்லை அவ்வாறானவர்களும் புறக்கணிக்கப்பட்டு புறம் தள்ளப்படும் அவலநிலை.
    செக்ஸ் கல்வியை முதியவர்களும் படிப்பிக்க விரும்புவதில்லை. அவர்களிடம் படித்துக்கொள்ள யுவ, யுவதியரும் விருப்பம் இல்லை இதற்காக பரிந்துரை செய்யும் புத்தகங்கள் வெள்ளையருடையதாக இருப்பின் அவர்கள் அங்கு போக துடிப்பதில் ஆச்சரியம் இல்லையே?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .