2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

பச்சைக்கிளிக்கு இறுதிக்கிரியை

Menaka Mookandi   / 2010 நவம்பர் 25 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

31 வருடங்களாக வீடொன்றில் வளர்க்கப்பட்ட கிளியொன்று உயிரிழந்ததை அடுத்து வீட்டு உரிமையாளர்கள் அதற்கு இறுதிக்கிரியை நடத்திய விநோத சம்பவமொன்று மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கிளிக்கு சவப்பெட்டி தயாரித்ததுடன் பிக்குமார்களை வரவழைத்து இறுதிக் கிரியைகளும் நடத்தப்பட்டதன் பின்னரே மேற்படி கிளியின் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இறுதிக்கிரியை நிகழ்வில் குறித்த வீட்டு உரிமையாளர்கள் மாத்திரமின்றி உறவினர்கள் மற்றும் கிராமவாசிகள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.

மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த எச்.பி.ரணவீர (வயது 61) என்பவருடைய வீட்டிலேயே இந்த கிளி கடந்த 31 வருடங்களாக வளர்க்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • Athekk Saturday, 27 November 2010 02:26 AM

    இங்க கிளிக்கே நல்லடக்கம் ! அன்று அங்கே மனிதருக்கிருக்கவில்லை நல்லடக்கம் ! (பலஸ்தீனில்,இராக்கில் ,ஆப்கனிஸ்தானில் )

    Reply : 0       0

    birasanna Friday, 24 December 2010 06:32 PM

    மனித நேயம் உள்ள மனிதர்களும் இருக்கிறார்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .