2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

விபசார நிலையத்திற்கு செல்வதற்காக நகைகளை திருடிய சிறுவர்கள் நெருக்கடியில்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 10 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

விபசார நிலையத்திற்கு செல்வதற்காக தாய்மாரின் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 14 வயது சிறுவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி சிறுவர்கள், தமது வீடுகள் அமைந்து பகுயில் நகை அடகு பிடிப்பவரிடம் சுமார் 513,475 ரூபாய் பெறுமதியுள்ள தங்க நகைளை, 51,347.5 இற்கு விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப் பணத்தில் சிறு தொகையை பீஸா, தந்தூரி போன்ற உணவுகளுக்காக செலவிட்ட மேற்படி சிறுவர்கள் பின்னர் சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்றுள்ளனர்.

'ஹோர்மோன் சித்தபிரமை'யில் இருந்தவாறு மேற்படி சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நகையின் பெறுமதியில் பத்தில் ஒரு பங்கை மட்டுமே மேற்படி சிறுவர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.

'விசாரணை மேற்கொள்ளும்போது அவர்களின் முகத்தில் பிரகாசமான சிரிப்பை பார்க்க முடியும்' என பொலிஸ்  பேச்சாளர் ராப் மின்னெட் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு எதிரான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .