2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வாழ்வியல் தரிசனம் 27/012016

Princiya Dixci   / 2016 ஜனவரி 27 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழிவு என்பது தீயவகைத் தொடுதலால் நிகழ்வதேயாகும். தீயதைத் தொட்ட அரசியல்வாதியின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகின்றது. துர்க்குணங்களைக் கொண்டவர்களுக்கு உடல்நிலை கெட்டுவிடுகின்றது.

அதேபோல் சுற்றாடலைச் சேதமடைத்ததனால், மனிதனின் சுகாதாரம் மட்டுமல்ல, அவன் வாழும் நிலமும் பழுதடைந்து இயற்கை அழிவுகளுக்குள்ளாகிவிடுகின்றன.

தீய காரியங்களுக்கான பிரதிபலன் உடன் நிகழாமல், அவை காலப்போக்கில் கஷ்டத்தை உண்டு பண்ணிவிடுகின்றது.

தகாததைத் தவிர்ப்பதே உகந்தது. ஒவ்வொரு தனிமனிதனின் வேண்டாத செயல்களால் முழு உலகமே பாதிப்புக்குள்ளாகின்றமையினைப் பலரும் உணர்வதாயில்லை. 

பொருந்தாத வாழ்வு முறைக்குள் புகுந்து கொள்ள விளையவேண்டாம்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .