2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வாழ்வியல் தரிசனம் 25/01/2016

Princiya Dixci   / 2016 ஜனவரி 25 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருவரிடம் பெற்ற உதவிகளை வெளியே சொல்வது தனக்குக் கௌரவமானது அல்ல என எண்ணும் மனிதர்கள் செய்நன்றி மறந்தவர்கள் மட்டுமல்ல, ஆணவமும், வரட்டுக் கௌரவமும் கொண்ட மிலேச்சர்களுமாவர்.

கல்வி கற்பித்த ஆசான்களையே மறந்துவிடும் பேர்வழிகள் ஒரு கணம் கூட தான்; எவர் மூலம் முன்னேறினேன் என்பதை நினைக்க வேண்டுமல்லவா?

உதவிகளைக் கோரும் போது பவ்யமாக நடப்பவர்கள், தங்கள் காரியம் முடிந்த பின் எதுவுமே நடக்காதது போல் நடப்பது நடிப்பின் உச்ச நிலையாகும். 

ஒருவருக்குக் ஒருவர் உதவுதல் தான் உறவுகளை மேம்படுத்தும். செய்நன்றி மறக்காமல் இருந்தாலே போதும், கொடுத்தவர் மனம் நிறையும். 

இத்தகையவர்களின் ஈகைக்குணம் மென்மேலும் விரிவடையும்‚

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .