2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வாழ்வியல் தரிசனம் 31/12/2015

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோகத்திலும் கண்ணீர் வரும், இதயடம் புளகாங்கித மடையும் போதும் கண்ணீர் சொரியும். மொத்தத்தில் ஈரமனம் கொண்டவர்களின் விழிநீர் சுரப்பது இயற்கையானதே‚

மேலும், இந்நிலை கோழைத்தனமானதும் அல்ல. பெரும் தலைவர்களும் மாவீரர்களும் கூட உணர்ச்சிப் பெருக்கில் உருகிவிடுதல் நெஞ்சத்தின் ஆழமான அன்பின் வெளிப்பாடுதான்‚

இன்ப, துன்பங்களுள் ஆட்படாதவர் எவருளர்? ஆயினும் சிலருக்கு கண்ணீர் சுரப்பது சிரமாக இருக்கலாம். 

ஆயினும் நெஞ்சம் விடும் கசிவின் பெருக்கத்தை எம்மால் உணரத்தான் முடியும். சோகத்தைக் களைய அழுது தீர்த்தால், மனதில் பாரம் குறையும் என்பார்கள். கண்ணீரின் வேகத்தைக் காலம்தான் கலைக்கும்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .