2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை

‘பூமி, அழியப் போகின்றது’

Editorial   / 2017 டிசெம்பர் 28 , மு.ப. 06:00 - 0     - 163

இந்தப் பரந்த, பிரமாண்டமான பூமி, அழியப் போகின்றது என்று, பலர் அங்கலாய்ப்புடன் பேசிவருகின்றனர்.

பூமி உருண்டையானது. அதனால் அதை ஒரு துடுப்பாட்டப் பந்து போன்று எண்ணுவதும், பொறுப்பற்ற நகைப்பூட்டும் அறிவீனம்.

பூமி பிளப்பது, நொறுங்குவதைச் சொல்லிக்கொள்பவர்கள், ஏதோ களியாட்ட நிகழ்வில் நிகழும் வாணவேடிக்கை எனக் கருதுகின்றனர்.

யுத்த வடுவை, அதன் கோரத்தை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும், இந்தப் பூமி அதிர்ந்தால் நெஞ்சின் வலியை உணர்வார்கள்.

ஆனால், எங்கள் அரசியல்த் தலைவர்கள், பேரிடியை அனுபவிக்காமல் வீரம் பேசுகின்றார்கள்.

நுளம்பு கடித்தாலே அலறுகின்ற இவர்கள், வீரவசனம் பேசி, மக்களைத் திசை திருப்புவது, இறைசினத்துக்கு ஆளாவதற்கேயாகும்.

கோரமான சிந்தனைகளை வேருடன் களை.

வாழ்வியல் தரிசனம் 28/12/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X