2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

தர்மம் செய்தலே நிம்மதி தரும்

Princiya Dixci   / 2017 மே 02 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லெண்ணெங்கள் பூக்கும்போது, அதனை நிறுத்தாதீர்கள்; அதனுடன் சஞ்சாரம் செய்யுங்கள். 

இந்த எண்ணங்களே உங்களை அறியாமல் அதனைச் செயல் உருவில் கொண்டுவர விழைவீர்கள். நல்ல விடயங்கள் சுவாரஷ்யமானவைதான்.

இவற்றை நீங்கள் சிரமம்பாராமல் செய்யும்போது, உங்களுடன் அனைவரும் இணையத் தயாராகிவிடுவார்கள்.

எல்லோருக்கும் ஏதோ ஒரு தருணத்தில், ஏதாவது நன்மையான காரியங்களைச் செய்ய எண்ணம் வரலாம். ஆனால், இதனைச் சட்டென மறந்து வேறு பணிகளில் மூளையைச் செலுத்துவார்கள். 

புண்ணியம் செய்தலே மகா பாவமான காரியம் என எண்ணும் துஷ்டர்களும் இருக்கின்றார்கள். 

மனம் மாறுமுன் ஈகைசெய்தலே உத்தமமானது. நிலையற்ற மனித வாழ்வில், நல்ல சந்தர்ப்பங்களை நல்ல காரியங்கள் செய்தலை நழுவவிடவேண்டாம். தர்மம் செய்தலே நிம்மதி தரும். 

வாழ்வியல் தரிசனம் 02/05/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X