2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

கல்விக்கு வேலி இல்லை

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 13 , மு.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளம்வயது மேதைகள் எப்படி உருவாகின்றார்கள் என்பதற்குப் பலகாரணங்கள் உண்டு. இது அவர்களின் பரம்பரை தொடர்பானது எனவும் ஒரு பிரதானமான கருத்துண்டு. ஆனால், இன்று கல்வியில் சமத்துவ நிலை காணப்படுவதால் கல்வி கற்காத பெற்றோரின் பிள்ளைகளும் அதீத மூளை வளர்ச்சியைப் பெற்று விடுகின்றனர். 

ஏழை மாணவர்களுக்கு அரசாங்கம் இலவசக்கல்வி, தாய் மொழிக் கல்வி, சாதாரண பாடசாலைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதால் மிகச் சிறப்பான பெறுபேறுகளைக் கி​ராமத்துப் பிள்ளைகளும் பெற்று விடுகின்றனர். ‘ஒட்டீசியம்’ எனும் நோய் சிறுவர்களைப் பாதிப்டைந்துவிடச் செய்கின்றன.இந்த நோய் உள்ளவர்கள் தகுந்த சிகிச்சை பெற்று, கல்வித்துறையில் வல்லுநர்களாக சாதனை படைத்திருக்கின்றார்கள்.  

உலகில் முதல்தர பணக்காரர் பில்கேட், ஹிந்திப்பட நடிகர் ஹிருத்திக்ரோன் போன்றொர் இந்நோயினால் பீடிக்கப்பட்டு மீண்டவர்கள்தான். 

கல்விக்கு வேலி இல்லை; எல்லையில்லாத சாதனைகளை எவரும் ஈட்ட முடியும். 

 

வாழ்வியல் தரிசனம் 13/04/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X