Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Princiya Dixci / 2017 மே 08 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாவுக்குத் தருகின்ற எப்பேர்ப்பட்ட அமிர்தத்தின் சுவையைவிட மனதுக்குத் தரும் சுவையே மேலானது.
நெஞ்சத்தை இலேசாக்கி, இறையுணர்வை மேல்நோக்கும்போது, ஏற்படும் பக்திச் சுவையே, ஆன்மா அடையும் மேன்மைமிகு நறுஞ்சுவையாகும்.
நாங்கள் உண்ணும் உணவை வாயனூடாகச் சாப்பிடும்போது, எங்கள் நாக்கு சுவையறிந்து கொள்கின்றது. இவை எல்லாமே ஒன்றரை அல்லது இரண்டு அங்குல நீளத்துக்குள்தான். அவை கடந்து விட்டதும் சுவையின் காலமும் கரைந்து விடுகின்றது.
எவ்வளவு நேரத்துக்குச் சாப்பிடுகின்றோமோ, அந்தளவு நேரத்தின் பின்னர் சுவையை நம்மால் உணரமுடியாது.
ஆனால், இறைபக்தி நிரந்தரமானது. பக்தி வௌ்ளமென நெஞ்சத்தில் உள்நின்றால், அதனூடு சஞ்சாரம் செய்யும் பக்தனின் நிலை, சொல்லொண்ணா பரவச நிலையன்றோ!
இதனையே அடியார்கள், பக்திச் சுவையெனச் சொன்னார்கள். பக்தி சுத்தமானது; அத்தனையையும் தரும்.
வாழ்வியல் தரிசனம் 08/05/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago