2025 ஏப்ரல் 16, புதன்கிழமை

மது போதையில் வயோதிபப் பெண்ணை மோதித்தள்ளிய பொலிஸார்

Freelancer   / 2025 ஜனவரி 25 , பி.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி - ஏ9 பிரதான வீதியில் அம்மாச்சி உணவகத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையில் வயோதிபப் பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மோதியத்தில் தலையில் படுகாயமடைந்த பெண் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பொலிஸாரும் அதிக மது போதையில் காணப்பட்டுள்ளனர். அத்தோடு அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளில் மதுபானங்களும் இருந்தமை பொது மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X