2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் வாகனத்தின் மீது தாக்குதல்: ஒருவர் கைது

Editorial   / 2024 பெப்ரவரி 02 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன் 

வவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலைய வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட ஒருவரை பொலிஸார்  வியாழக்கிழமை (1) கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்காக வாகனத்தில்  பொலிஸார் சென்றுள்ளனர். 

இதன் போர் வீதியில் நின்றுக்கொண்டிருந்த நபரொருவர் பொலிஸாரின் வாகனத்தின் மீது கற்களை வீசியெறிந்துள்ளார்.  

இதனையடுத்து குறித்த நபரை புளியங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் மீது மேற்கொள்ளப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X