2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

தாத்தா செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி பேத்தி பலி

Editorial   / 2024 ஜூன் 14 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரொசேரியன் லெம்பட்

தாத்தா செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி 8 வயதான பேத்தி  உயிரிழந்த சம்பவம், மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் வியாழக்கிழமை(13)  இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் உள்ள விவசாயியான ஒருவர் தனது  வயலில் உழவு இயந்திரத்தின் ஊடாக உழுது கொண்டிருந்தார்.

இதன் போது உழவு இயந்திரத்தின் மக்காட் பகுதியில் அமர்ந்து கொண்டிருந்த அவரது 8 வயதுடைய   பேத்தி  திடீரென கீழே விழுந்த நிலையில் உழவு இயந்திரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X