2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

ஆனையிறவு விபத்தில் ஒருவர் பலி

Editorial   / 2024 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

யது பாஸ்கரன்

கிளிநொச்சி பளை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட ஆனையிறவு  இராணுவ சோதனை சாவடியில் வியாழக்கிழமை (09) காலை  இரண்டு மோட்டார் சைக்கிள்கள்  ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 

கிளிநொச்சி பளை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட ஆனையிறவு இராணுவ  சோதனைச் சாவடி சாவடியில் அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது 

இந்த விபத்தின் போது ஒருவர்   உயிரிழந்துள்ளதுடன் மேலும்  இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி  மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 

அதாவது யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார்விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .