2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

விமானச் சேவை இடைநிறுத்தம்

Editorial   / 2022 மார்ச் 28 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கன் விமானச் சேவையானது, இலங்கைக்கும் ரஷ்யாவின் மொஸ்கட் நகரத்துக்கும் இடையில் நடத்திய விமானச் சேவையை, இன்றிலிருந்து இடைநிறுத்தியுள்ளது.

நிர்வகிக்க முடியாத காரணத்தால் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக, ஸ்ரீ லங்கான விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் நிலைமை வழமைக்குத் திரும்பியதன் பின்னர், அந்த சேவையை மீளவும் ஆரம்பிப்பதற்கு நிறுவனம் எதிர்பார்க்கின்றது என்று நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கன் விமானச் சேவை, ​கட்டுநாயக்க மற்றும் மொஸ்கட் நகரத்துக்கு இடையில், வாரத்தில் இரண்டு தடவைகள் விமானச் ​சேவைகளை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .