2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கமட்ட சன்நிவேதனய திட்டத்துடன் டயலொக் இணைவு

S.Sekar   / 2021 மார்ச் 15 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து இலங்கையர்களையும் ஒருவரோடு ஒருவர் ஒன்றிணைத்து முழுநாட்டையும் டிஜிட்டல் மயப்படுத்தும் நோக்கத்திற்கமைய டயலொக் ஆசிஆட்டா நிறுவனத்தினால் (டயலொக்), இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘கிராமத்திற்கு தொலைத்தொடர்பு வசதி’ செயற்றிட்டத்தின் முதற்கட்டம் இரத்தினபுரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தில் புதிதாக 37 தொலைத்தொடர்பு கோபுரங்களை நிறுவும் தலைமைத்திட்டமானது இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டதுடன், டயலொக் நிறுவனத்தினால் 2021 ஆம் ஆண்டு ஜுலை மாதமளவில் இதன் 18 தொலைத்தொடர்பு கோபுரங்கள் நிறுவப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். ‘கிராமத்திற்கு தொலைத்தொடர்பு சேவையின் அடுத்த கட்டமாக குருணாகல், மாத்தறை உட்பட இன்னும் சில மாவட்டங்களிலுள்ள பின்தங்கிய கிராமங்களிலும் 4G தொலைத்தொடர்பு வசதிகளை விரிவாக்கம் செய்வதில் கவனம் செலுத்தப்பட்டுவருவதுடன், 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியளவில் 100% கவரேஜ் வசதிகளை வழங்குவதுமே இதன் நோக்கமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .