2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வீடுகள் கையளிக்கப்படவுள்ளன

Princiya Dixci   / 2017 மார்ச் 09 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

புத்தளம், முஹியத்தீன் ஜூம்ஆ பள்ளி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பைதுஸ் ஸகாத் நிதியத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய வீடுகள் இரண்டு, பயனாளிகளுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு, நாளை (10) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

புத்தளம் மணல்குன்று செம்மந்திடல் பிரதேசத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள 20 வீடுகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டத்தில் மேலதிகமாக இந்த இரு வீடுகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

முஹியத்தீன் ஜூம்ஆ பள்ளி நிர்வாக சபை தலைவர் பீ.எம். அப்துல் ஜனாப் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், உலமாக்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .