2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

குறத்திகள் மூவர் கைது

ஹிரான் பிரியங்கர   / 2017 ஜூலை 03 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

முந்தல், அங்குணுவில குடா மடு தேவாலயத்தில் இடம்பெற்ற மங்கள உட்சவத்தின் போது, பெண்களின் தங்கச் சங்கிலிகளை அறுத்துக் களவாடிய குறத்திப் பெண்கள் மூவர், நேற்று (02) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பைச் சேர்ந்த இப்பெண்கள், உட்சவத்தில் பங்கேற்க வந்தமை போன்று நன்கு உடையணித்து இவ்வாறான திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரென, முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பெண்களிடமிருந்து 4 தங்கச் சங்கிலிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்த முந்தல் பொலிஸார், ஏனைய பிரதேசங்களிலும் இவ்வாறான தங்கச் சங்கிலிகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளமை தொடர்பிலும் இவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .