2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

அலங்கார கல் விற்க முயன்றவருக்கு மறியல்

Yuganthini   / 2017 ஜூலை 09 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொல்பொருள் தளமொன்றிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டதாக கூறப்படும் சிற்பங்களுடனான அலங்கார கல்லொன்றை கைப்பற்றும் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, நாளை மறுதினம் (11) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கெபித்தி கொல்லேவ நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஹொரவ்பத்தன பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, அநுராதபுரத்திலுள்ள வர்த்தகரொருவருக்கு, 3 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காகக் கொண்டுச் செல்லப்பட்ட சிற்பங்கள் அடங்கிய கல், பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X