2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

வெற்றிலைக்கேணியில் புதைக்கப்பட்ட ஆண்

Princiya Dixci   / 2022 மே 11 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.தில்லைநாதன்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணியில் ஆண் ஒருவரது சடலம் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகித்து, அவ்விடத்தை  மருதங்கேணி பொலிஸார் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை பெற்று, குறித்த இடத்தை தோண்டுவதற்க்கு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராசன் சிவஞானம்  என்பவரது சடலமே புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுவதுடன், குடும்பத் தகராறு காரணமாக இது இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மருதங்கேணி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .