2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

வல்வெட்டித்துறை நகர சபைக்கு புதிய தவிசாளர்

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 23 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த்

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் இராமச்சந்திரன் சுரேன் தெரிவாகியுள்ளார்.

வல்வெட்டித்துறை நகர சபைக்கான தவிசாளர் தெரிவு, நகர சபை மண்டபத்தில் இன்று (23) இடம்பெற்றது.

இதன்போது தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினருக்கு ஆதரவாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் இருவர், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவர், சுயேட்சை குழுவை சேர்ந்த நால்வர் மற்றும் விடுதலைக்கூட்டணி உறுப்பினர் ஒருவர் ஆகிய 8 வாக்குகள் அளிக்கப்பட்டன.

இவருடன் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் க.சதீஸ்க்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆறு பேரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் இருவருமாக 08 வாக்குகள் அளிக்கப்பட்டன.

அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் சபைக்கு சமூகமளிக்கவில்லை.

அந்நிலையில் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட இருவரும் 08 வாக்குகளை பெற்று சமநிலையாக காணப்பட்டமையால், திருவருள் சீட்டு மூலம் தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர் இ.சுரேன் தவிசாளராகத் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .