2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

வயோதிபப் பெண்ணின் சங்கிலி அபகரிப்பு

Freelancer   / 2022 ஜூன் 07 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன் 

சாவகச்சேரி - கோவில்குடியிருப்பு கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் ஆலயத்திற்கு வந்த வயோதிபப் பெண்ணின் சங்கிலி திருட்டுப் போயுள்ளது.

குறித்த ஆலயத்திற்கு நேற்று காலை வந்து வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வயோதிபப் பெண்ணின் ஒன்றரைப் பவுண் தங்கச் சங்கிலியை இனந்தெரியாத நபர் ஒருவர் அறுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார்.

இதில், பெரியமாவடி சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த 67 வயதான பெண் ஒருவரின் சங்கிலியே இவ்வாறு அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார்   விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (R) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .