2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

யாழ். பொலிஸ் நிலையம் சென்ற முதியவர் மரணம்

Freelancer   / 2023 ஜூலை 22 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

இளைஞனின் தாக்குதலுக்கு இலக்காகி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்ற முதியவர் , பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் - கொட்டடி பகுதியை சேர்ந்த செல்வரத்தினம் ஹரிச்சந்திரன் (வயது 66) என்பவரே நேற்று உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாண நகர மத்தி பகுதியில் ஓடுகள் விற்பனை செய்யும் கடையொன்றினை உயிரிழந்த முதியவர் நடாத்தி வந்திருந்தார். அவரிடம் ஓடு வாங்கிய இளைஞன் ஒருவர் , மிகுதி பணத்தினை வழங்காது காலம் கடத்தி வந்துள்ளார். 

அந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இளைஞனுக்கும் முதியவருக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதில் , இளைஞன் முதியவரை தாக்கியுள்ளார். 

தான் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்ற முதியவர் , பொலிஸ் நிலையத்தினுள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

முதியவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , முதியவரை தாக்கிய இளைஞனை பொலிஸார் கைது செய்து , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .