2025 மார்ச் 31, திங்கட்கிழமை

யாழில் ஹெரோயினுடன் இருவர் கைது

Editorial   / 2025 மார்ச் 24 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்,எஸ் தில்லைநாதன்

யாழ்ப்பாணம் நகர பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள், ஞாயிற்றுக்கிழமை (23) கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் இணைந்து கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

கைதான 22 மற்றும் 23 வயதான இளைஞர்களிடம் இருந்து 805 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

இரண்டு நபர்களையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X