2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

யாழில் பெண் உள்ளிட்ட இருவர் கைது

Freelancer   / 2022 ஒக்டோபர் 03 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

யாழ்ப்பாணம் - கொழும்புத் துறை கிளன் தோட்டப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

6 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை, உடமையில் விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் 30 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டிருந்தார். 

அத்துடன் அவரது நெருங்கிய சகாவான அதே வயதுடைய இளைஞன் ஒருவரும் 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். 

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராகவும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .