Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2023 ஒக்டோபர் 09 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர்.
காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அல்வாய் பகுதியில் திங்கட்கிழமை (09) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் , அருமைராசா சிந்துஜன் (வயது 27) எனும் நபரே காயமடைந்துள்ளார்.
பல்வேறு வாள்வெட்டு , திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குறித்த நபரை பொலிஸார் கைது செய்ய முற்பட்டுள்ளனர். அவர், பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் செல்ல முற்பட்டார். அதன் போதே அந்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டோம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் காலில் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
40 minute ago
3 hours ago