2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

யாழில் இளைஞன் மீது வாள் வெட்டு

Freelancer   / 2022 நவம்பர் 11 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

குடைக்குள் வாளை  மறைத்து எடுத்து வந்து வீதியில் சென்ற இளைஞன் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. 

யாழ்ப்பாணம் அரியாலை தபால் கட்டை சந்திக்கு அருகில் நேற்று (10) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாள் வெட்டில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .