2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

மீன்களை அழிக்க உத்தரவு

Janu   / 2024 ஜூலை 11 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், காக்கை தீவு மீன் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழுந்தடைந்த இறால்களை அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

காக்கைதீவு சந்தையில் பழுதடைந்த மீன் மற்றும் இறால்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆனைக்கோட்டை பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சந்தைக்கு சென்ற அவர் திடீர் சோதனை நடவடிக்கைளை முன்னெடுத்தார். 

அதன் போது , விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த, மீன்கள் மற்றும் இறால்கள் ஒரு தொகையை மீட்டிருந்தார். 

அவற்றை நீதிமன்றில் சான்று பொருட்களாக பரப்படுத்தி வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் , பழுதடைந்த மீன்கள் மற்றும் இறால்களை அழிக்குமாறும் உத்தரவிட்ட மன்று , வழக்கு விசாரணைக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08ஆம் திகதியிட்டார். 

எம். றொசாந்த்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .