2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

மீனவரின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2022 மே 17 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த்

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை பகுதியில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற உதயபுரம் பகுதியைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை டென்சில் ராஜேந்திரன் (வயது 53) எனும் மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த மீனவர், தனது மகனுடன் நேற்று (16) தொழிலுக்குச் சென்ற வேளை கடலில் தவறி விழுந்து காணாமல் போயிருந்தானர்.

இந்நிலையில், நெடுந்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய நிலையில் மீனவரின் சடலம், இன்று (17) மீட்கப்பட்டுள்ளது.

உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .