Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2022 நவம்பர் 09 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். றொசாந்த்
போதைப்பொருள் கடத்தலுக்கு வடக்கு மீனவர்கள் துணை போக கூடாது எனவும் , அவ்வாறு கடத்தலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் அதனை பாதுகாப்பு தரப்பினருக்கோ , பொலிஸாருக்கோ தெரியப்படுத்த வேண்டும் என யாழ்ப்பாணம் ஆரிய குளம் நாக விகாரை விகாராதிபதி மீனவர்களிடம் கோரியுள்ளார்.
வடக்கில் அமைக்கப்படும் கடலட்டை பண்ணைகள் தொடர்பில் , யாழ். மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகள் நேற்றைய தினம் (08) செவ்வாய்க்கிழமை விகாராதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
அதன் போது மீனவர்களுடன் கலந்துரையாடிய விகாராதிபதி , வடக்கில் போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்துள்ளன. பெரும்பாலான போதைப்பொருட்கள் தமிழகத்தில் இருந்து கடல் வழியாக வடக்கு மீனவர்களின் உதவிகளுடன் வடக்குக்கு கடத்தி வரப்படுகின்றன என தெரிவிக்கப்படுகிறது.
எனவே கடற்தொழிலுக்கு செல்வோர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக விழிப்புடன் இருந்து , போதைப்பொருள் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago