2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நிலத்தின் கீழ் 150 லீற்றர் கோடா

Freelancer   / 2022 நவம்பர் 16 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சங்கானையில் நிலத்தின் கீழ் பதுக்கி  வைக்கப்பட்டிருந்த 150லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சங்கானை பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் நீண்ட காலமாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் யாழ்ப்பாண  பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கரின்  கீழ் செயல்படும் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு  பிரிவினருக்கு  கிடைத்த ரகசிய தகவலின்  அடிப்படையில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகத்துக்கிடமான வீட்டினை சோதனையிட்டபோது வீட்டின் பின்புறமாக நிலத்தின் கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த 150 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதோடு 35 வயதுடைய சந்தேகர் நபர்  ஒருவரும் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மானிப்பாய் பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .