2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

நாய் குறுக்கே பாய்ந்ததால் ஏற்பட்ட நிலை

Freelancer   / 2023 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

நவாலி வழுக்கையாறு வெளியால் நேற்றையதினம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்ளஇளைஞன் நாயுடன் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் நவாலி வழுக்கையாறு வெளியால் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்தவேளை நாயொன்று திடீரென குறுக்கே பாய்ந்தது. இதனால் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த இளைஞன் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அராலி மேற்கு பகுதியைச் சேர்ந்த தங்கராசா துஷ்யந்தன் (வயது 21) என்ற இளைஞனே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X