2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சிவாஜிலிங்கத்துக்கு நீதிமன்ற கட்டளை

Freelancer   / 2023 ஜனவரி 03 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

தீலிபனின் நினைவுதினத்தை அனுஸ்டித்தமை தொடர்பாக, பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தை, கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு 11ஆம் திகதி சமூகம் அளிக்குமாறு நீதிமன்ற கட்டளை வழங்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை (31) எம்.கே சிவாஜிலிங்கத்தின் வீட்டுக்குச் சென்ற வல்வெட்டித்துறைப் பொலிஸார், நீதிமன்ற கட்டளையை வழங்கியுள்ளனர்.

நீதிமன்ற தடையை மீறி, தீலிபனின் நினைவுதினத்தை அனுஸ்டித்த குற்றச்சாட்டின் கீழ், கோண்டாவில், அன்னங்கை ஒழுங்கையில் வைத்து 2020 செப்டம்பர் 15ஆம் திகதி எம்.கே சிவாஜிலிங்கம் கைதுசெய்யப்பட்டார்.

நீதிமன்ற தடையுத்தரவை மீறியமை, தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினரை நினைவுகூர்ந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ்,  யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட எம்.கே சிவாஜிலிங்கத்தை நீதிமன்று  எச்சரித்து, இரண்டு இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் விடுவித்திருந்தது.

இது தொடர்பாக, எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவிக்கும்போது கூறியதாவது; தியாகி தீலிபனின் நினைவுதினத்தை அனுஸ்டித்தமை தொடர்பாகக் கைது செய்து, 24 மணி நேரம் தடுத்துவைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தை வழக்கில் புகுத்தக்கூடிய வகையிலே, பொலிஸார் முயன்றதை நான் அறிந்தேன். பின்னர் சாதாரண சட்டத்தின் கீழ் முன்னிலைப்படுத்தப்பட்டேன். 

பயங்கரவாத சட்டத்தின் கீழ் நாங்கள் இந்த வழக்கை தாக்கல் செய்ய யோசித்து இருக்கின்றோம். சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இதன் கோவை ​அனுப்பப்பட்டு இருக்கின்றது என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்தனர். அந்த அடிப்படையில், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிமன்ற கட்டளையை பொலிஸார் வழங்கிச் சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செயலுக்காக, யாழ்ப்பாணத்தில் மேல்நீதிமன்றம் இருக்கத்தக்கதாக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நோக்கம் என்ன?  பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்தார்களா அல்லது பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒத்ததாக புலிகளின்  மீளுருவாக்கம் போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தப்பட்டிருக்கிறதா என்பது குற்றப்பத்திரிகை வழங்கிய பின்னரே தெரியும். பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என கூறப்படும் போது, இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .