2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

காரைநகரில் இந்திய மீனவர்கள் கைது

Freelancer   / 2022 ஒக்டோபர் 20 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு மீன் பிடித்துக்கொண்டிருந்த வேளையிலையே கடற்படையினர் இவர்களை கைது செய்துள்ளனர். 

கைதான மீனவர்களையும் அவர்களின் படகினையும் மேலதிக நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் கடற்படையினர் முற்படுத்தவுள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .