2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

கப்பம் பெற்றவர் கைது

Janu   / 2024 ஜூலை 25 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தன்னை பொலிஸ் புலனாய்வு பிரிவை சேர்ந்த உத்தியோகஸ்தர் என அடையாளப்படுத்தி நபர் ஒருவரை மிரட்டி 3 இலட்சம் ரூபாய் பணத்தினை கப்பமாக பெற்றுள்ளார். 

பணத்தினை கொடுத்த நபர் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸாரால் சந்தேக நபரா​ன இளைஞன் புதன்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார்.   . 

மேலும் , கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எம்.றொசாந்த் 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X