Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2023 பெப்ரவரி 26 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
புத்தபெருமான் கனவில் வந்து, தன்னை வழிபடுமாறு கூறியமையால் , அவ்விடத்தில் வழிபடுவதற்காக புத்த பெருமானின் சிலையை வைத்தேன் என நிலாவரை கிணற்றடியில் புத்த பெருமானை வைத்த இராணுவ சிப்பாய் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நிலாவரை கிணற்றடியில் உள்ள அரச மரம் ஒன்றின் கீழ் வெள்ளிக்கிழமை (24) இரவு புத்தரின் சிலை ஒன்று வைக்கப்பட்டு இருந்தது.
அது தொடர்பில் சனிக்கிழமை (25) ஊரவர்கள் அறிந்து அவ்விடத்தில் கூடியதுடன் , வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளருக்கும் அறிவித்தனர்.
அதனை அடுத்து தவிசாளர் அவ்விடத்திற்கு சென்ற நிலையில் , அங்கு இராணுவத்தினர் மற்றும் அச்சுவேலி பொலிஸார் ஆகியோரும் சென்று இருந்தனர்.
பிரதேச சபை தலையீட்டினை அடுத்து, புத்தர் சிலையை இராணுவத்தினர் அவ்விடத்தில் இருந்து அகற்றினர்.
இந்நிலையில் அவ்விடத்தில் புத்தர் சிலை வைத்தார் என கூறப்பட்ட இராணுவ சிப்பாயியிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது , புத்த பெருமான் கனவில் வந்து தன்னை வழிபடுமாறு கூறியமையால் , இவ்விடத்தில் புத்தர் சிலையை வைத்து வழிபட்டேன் என கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago