2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

கடல் மூலம் தாயகம் திரும்பியவர் கைது

Niroshini   / 2021 பெப்ரவரி 05 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன், எம்.றொசாந்த்

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் - வளலாய் பகுதிக்கு, சட்டவிரோதமாக நாடு கடந்து வந்த ஒருவர், பலாலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

வளலாய் வடக்குப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த  இளைஞர், 2012ஆம் ஆண்டில் இந்தியாவுக்குச் சென்றுள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மேற்படி இளைஞர், செவ்வாய்க்கிழமை  சட்டவிரோதமான முறையில், வளலாய் பகுதிக்கு வந்துள்ளதாக, பொலிஸார் மேலும் கூறினர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .