Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Editorial / 2024 ஜனவரி 05 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழில் கடற்தொழிலுக்கு சென்றவர் , திடீர் சுகவீனமுற்ற நிலையில் கரைக்கு அழைத்து வரப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த அன்ரனி ஜூட் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடற்தொழிலுக்காக மேலும் மூவருடன் கடலுக்கு சென்ற நிலையில் , வியாழக்கிழமை (04) அதிகாலை 3 மணியளவில் திடீரென சுகவீனமுற்றுள்ளார். அதனை அடுத்து ஏனையவர்கள் படகினை திருப்பி கரைக்கு கொண்டு வந்து அவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (04) உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago