2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

இரவு இசை நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு

Mithuna   / 2023 டிசெம்பர் 05 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த நவம்பர் மாதம் 4ஆம் திகதி யாழ் விடுதி ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்வில் (DJ night) கலந்து கொண்ட இளையோர் மது அருந்தியதாகவும் , அதில் சிலர் போதைப்பொருளை பாவித்ததாகவும் செய்திகள் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. 

அது குறித்து , பொலிஸாரோ , நிகழ்வுக்கு அனுமதி வழங்கிய மாநகர சபையோ  கவனம் செலுத்தவில்லை என பொலிஸ் மற்றும் மாநகர சபையினர் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

இந்நிலையில், யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல விடுதியில் ஒன்றில், வருட இறுதியை முன்னிட்டு (Year End) இரவு இசை நிகழ்வுக்கு (DJ night) யாழ்.மாநகர சபையிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில் மாநகர சபை அனுமதி மறுத்துள்ளது.

எம்.றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X