2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ப்ரடி கமகே மீது தாக்குதல்: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

George   / 2016 ஜூன் 14 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக் குழுவின் அமைப்பாளரும் இணைய ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான ப்ரடி  கமகே மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த  இன்று செவ்வாய்க்கிழமை (14) உத்தரவிட்டார்.

இதேவேளை, குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் நீர்கொழும்பு பொலிஸார் கடந்த 4ஆம் திகதி சைதுசெய்தனர்.

குறித்த சந்தேகநபர்களை நீர்கொழும்பு பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இன்று 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .