2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஆரோக்கியமான தேசம் கட்டியெழுப்பப்படும்: ஜனாதிபதி

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுபானம் மற்றும் புகையிலை தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகள் ஊடாக ஆரோக்கியமான தேசத்தினை கட்டியெழுப்பும் பொறுப்பானது நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

உலக சமூகம் முகங்கொடுத்துவரும் தொற்று நோய்கள் தொடர்பாக அரசாங்கமானது நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தி அதனூடாக ஆரோக்கியமான தேசத்தினை கட்டியெழுப்பத் தேவையான சிறப்பான செயற்பாடுளை முன்னெடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். 

உலக சுகாதார ஸ்தாபனமானது சுகாதார அமைச்சர் வைத்தியக் கலாநிதி ராஜித சேனரத்தினவுக்கு 'உலக புகையிலை தின விருது 2015' இனை வழங்கி கௌரவிக்கும்; முகமாக வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் திங்கட்கிழமை (07) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். 

செப்டெம்பர் 2013ஆம் ஆண்டு இதே விருது தனக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்த வருடம் அந்த விருதினை பெற்றுக்கொள்ளும் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் இதன்போது தெரிவித்தார். 

புகையிலைப் பாவனையைத் தடுக்கும் சட்டதிருத்தம் ஒன்றினை உருவாக்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தினை அமைச்சரவையில் தான் சமர்ப்பித்தபோது அவ்வாறான சட்டமூலமொன்று இருந்தால் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பாதிக்கும் என்ற காரணத்தை முன்வைத்து அச்சந்தர்ப்பத்தில் அது நிரகரிக்கப்பட்டபோது ராஜித சேனாரத்த மற்றும் சம்பிக ரணவக்க ஆகியோரே தன்னுடன் கூட இருந்தார்கள் என்பதையும் ஜனாதிபதி இங்கு நினைவுகூர்ந்தார். 

தேசிய ரீதியாக போதைப்பொருள் கொள்கையினைப் உருவாக்கும் பொருட்டு போதைப்பொருளுக்கு எதிராக தேசிய ரீதியில் முன்னெடுத்த நடவடிக்கைகளே இறுதியாக என்னை ஜனாதிபதியாக ஆக்கியது என்றும் அவர் இச்சந்தர்ப்பத்தில் மேலும் குறிப்பிட்டார். 

அமைச்சர்கள், பேராசிரியர் கார்லோ பொன்சேகா, புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் டாக்டர் பாலித அபேகோன், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி பூனம் கெத்ரசின் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .