2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் ஐவர் காயம்

Janu   / 2024 டிசெம்பர் 30 , பி.ப. 03:03 - 0     - 27

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழுவொன்று பயணித்த,  ஜீப் வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் கொடகவெல,பலங்கொட,ராகலை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண்  காயமடைந்து  மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், டிக் ஓயா ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

 ஞாயிற்றுக்கிழமை (29) அன்று சிவனொளி பாதமலைக்கு யாத்திரை சென்று திங்கட்கிழமை (30) அன்று திரும்பி கொடகலவெலை நோக்கி வந்து கொண்டிருந்த போது நல்லத்தண்ணி - மஸ்கெலியா பிரதான வீதி பிரவுன் தோட்ட பகுதியில் வைத்து இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.   

விபத்தின் போது ஜீப் வண்டியில் ஏழு பேர் பயணித்ததுள்ளதாகவும் அதில் இருந்த  குழந்தையொன்று மற்றும் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஜீப் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X